புதுச்சேரி குண்டு வெடிப்பு: பலி 2 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 1ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி, வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த 1ம் தேதியன்று பிற்பகலில் ரயில்வே டிராக் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அங்கு ஒரு பார்சல் கிடப்பதைப் பார்த்துப் பிரித்தனர்.
அப்போது அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில், அஜீத் குமார் (12) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்
அவனுடன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் செந்தமிழ்ச் செல்வன் என்ற சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.
இதனால் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications