தண்ணீர் பிடிப்பதில் தகராறு - பெண்ணின் காது கட்!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தண்ணீர் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில், பெண்ணின் காதை, தோடுகளுடன் அறுத்து எடுத்துச் சென்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், மேல தாழையுத்து பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த கோமுவின் மனைவி சுப்புலட்சுமி. இவர் நேற்று மாலை தெரு குழாயில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது சுப்புலட்சுமிக்கும், அங்கிருந்த பெண்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து முத்துலெட்சுமி, வசந்தா, துரை ஆகிய 3 பேரும்
சுப்புலட்சுமியின் இரு காதுகளையும் அவர் அணிந்திருந்த தோட்டுடன் அறுத்து எடுத்து சென்று விட்டனர்.
ரத்தம் சொட்டச் சொட்ட சுப்புலட்சுமி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாழையூத்து போலீசார் காதுடன் தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications