மத்திய அரசு அனுமதி தராவிட்டாலும் புதிய அணை கட்டுவோம்-அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தராவிட்டாலும் புதிய அணை கட்டுவது உறுதி என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முல்லை பெரியாறு நிலவரம் குறித்து ஒரு மனு கொடுத்தோம். அதில் முல்லைப் பெரியாறு அணை இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழை காலத்தில் நீர் மட்டம் உயரும் போது அணை பகுதியில் உள்ள மக்கள் பீதிக்கு உள்ளாகின்றனர்.
கடந்த 1979ல் மத்திய நீர்வள ஆணையம் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டது. அப்போது தமிழக அதிகாரிகளும், கேரள அதிகாரிகளும் உடனிருந்தனர். மத்திய அதிகாரிகள் பார்வையிடும்போது நீர்மட்டம் 142 அடியாக இருந்தது.
அணையை பரிசோதித்த மத்திய அதிகாரிகள் அணை அபாயகரமாக உள்ளதாகவும், நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்கவேண்டும். விரைவில் புதிய அணை கட்ட வேண்டும் எனக் கூறினர்.
புதிய அணை கட்டுவதற்கான இடத்தையும் அவர்கள் தேர்வு செய்ததற்கு, தமிழக அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தனர்.
அந்த இடத்தில் தான் புதிய அணை கட்ட தீர்மானித்துள்ளோம். மத்திய அரசு அதிகாரிகளிடம் அணை கட்ட சம்மதம் தெரிவித்த தமிழக அரசு, இப்போது எதற்காக மறுப்பு தெரிவிக்கிறது என்று தெரியவில்லை.
முல்லைப் பெரியாறு அணையில் சில பகுதிகளை மட்டும் தமிழக அரசு இப்போது புதுப்பிக்கும் பணிகளை செய்து வருகிறது. இனிமேலும் தமிழக அரசு கூறும் வாதத்தை ஏற்கமுடியாது. புதிய அணை கட்ட அனுமதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் புதிய அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது.
அணை கட்டுவதற்கு பொதுமக்களிடமே பணம் வசூலித்து கட்டுவவோம் என்று அந்த மனுவில் கூறியுள்ளோம்.
மனுவை பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இந்த மாதம் 19ம் தேதி தேசிய வளர்ச்சிக் கவுன்சில் மாநாட்டில் பங்கேற்க எல்லா மாநில முதல்வர்களும் வருகின்றனர். இந்த கூட்டத்தின் போது தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேச்சு நடத்தலாம் என பிரதமர் கூறியுள்ளதாக அச்சுதானந்தன் தெரிவித்தார்.
பிரதமர் இரு மாநில முதல்வர்களையும் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில், அச்சுதானந்தனின் இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications