கோவை: லாரி-கார் மோதலில் 5 ஐயப்ப பக்தர்கள் பலி, 4 குழந்தைகள் காயம்

Subscribe to Oneindia Tamil

Accident
கோயம்புத்தூர்: கோவை அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 ஐயப்ப பக்தர்கள் பலியாயினர். மேலும் 4 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் தங்கள் குழந்தைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் கோவை அருகே திருச்சி நெடுஞ்சாலையில் பட்டணம் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது எதிரில் ஆந்திராவில் இருந்து வந்து கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

இதில் காரில் இருந்த ஐயப்ப பக்தர்கள் நாராயணசாமி, மாருதி, கேசு, லோகேஷ் கண்ணா மற்றும் டிரைவர் லோகேஷ் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரில் இருந்த அவர்களின் குழந்தைகளான பூவிதா(11), பூவான்(14), ஹரிஷ்(14) மற்றும் ஷானு (10) ஆகியோர் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் பலியானவர்களின் உடல்கள் காருக்குள்ளே சிதைந்து கிடந்ததால் காரை கிரேன் மூலம் அகற்றியத்தான் உடல்களை போலீசாரால் மீட்க முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+