ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது தான்-என்ஆர்எஸ்ஏ

Subscribe to Oneindia Tamil

Ram Bridge satellite view
டெல்லி: ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது தான் என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேசிய விண்வெளி தொலையுணர்வு ஆய்வு மையமான என்ஆர்எஸ்ஏவின் (National Remote Sensing Agency) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் இந்திய விண்வெளித்துறையின் கீழ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இமேஜஸ் இந்தியா என்ற புத்தகத்தில் ஸ்டன்னிங் ஸ்டக்சர்ஸ் என்ற பிரிவு நாடாளுமன்றத்தில் தாக்கலாகியுள்ளது.

அதில், 30 கிமீ நீளம் கொண்ட இந்தப் பாலம் எப்படி உருவானது என்பது ஆச்சரியமாக உள்ளது. 17,50,000 ஆண்டுகளுக்கு முன் இது உருவாகியுள்ளது. இதன் புவியியல் அமைப்பைப் பார்த்தால் அது மனிதனால் உருவாக்கப்பட்டதாகத் தான் தெரிகிறது என கூறப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்துக்கு இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தான் முன்னுரை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாலம் இயற்கையாக உருவான தீவுத் திட்டு தான் என மத்திய புவியியல் துறையும், மத்திய அரசும் கூறி வரும் நிலையில், இந்திய விண்வெளித்துறையின் புத்தகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது புருவங்களை உயரச் செய்துள்ளது.

மத்திய புவியியல் துறையின் நிலைக்கு மாறாக இந்திய விண்வெளித்துறை மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+