'பெரிய நிறுவனங்களால் சில்லறை வியாபாரிகளுக்கு பாதிப்பில்லை'
திருச்சி: பெரிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் காலடி எடுத்து வைப்பதால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட மாட்டர்கள் என்று தமிழ்நாடு வர்த்தக கழகத்தின் தலைவர் ஜே.ஜே.எல்.ஞானராஜ் கூறியுள்ளார்
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தற்போது நாடு முழுவதும் ரிலையன்ஸ், ஸ்பென்சர்ஸ், த்ரிநேத்ரா போன்ற நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளன. இந்த நிறுவனங்கள் வந்துள்ளதால் சில்லரை வியாபாரிகளின் வர்த்தகம் பாதிக்கும் என்று எழும் எதிர்ப்புகள் தேவையில்லாதது.
சில்லரை வணிகத்தில் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஏராளமான கீழ்த்தர மக்கள் மற்றும் நடுத்தர மக்களை வாடிக்கையாளர்களாக வைத்துள்ளனர். இவர்கள் எப்போதும் பெரிய நிறுவனங்களின் கடைக்குள் செல்லமாட்டார்கள்.
பெரிய நிறுவனங்கள் அனைத்தும் உயர்மட்ட மக்களை மட்டும் கவர்வதற்காகவே அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக வர்த்தகத்தில் நுழைவதை நாங்கள் எதிர்த்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications