மதுரை வணிக நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கொள்ளை
மதுரை: மதுரையில் வணிக நிறுவனம் ஒன்றில் ரூ. 4 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
மதுரை, டவுன்ஹால் அருகில் நாகேந்திரன் என்வருக்கு சொந்தமான 3 மாடிகளை கொண்ட வணிக நிறுவனம் (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்) உள்ளது. நேற்று காலை நாகேந்திரன் திறந்த பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.
கடையில் கல்லாவில் வைத்து இருந்த ரூ. 4 லட்சத்து 26 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது. பணம் கொள்ளை போனது குறித்து அவர் போலீசுக்கு புகார் அளித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்த போலீசார் அங்கு தீவிர விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் கடைக்கு அருகில் உள்ள வீட்டின் மாடியின் வழியாக இறங்கி கொள்ளையர்கள் வணிக நிறுவனத்தில் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ள டவுன்ஹால் ரோட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications