திருச்செந்தூரில் வாலிபர் கொலை - கடற்கரையில் உடல் கிடந்தது
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடற்கரையில் கொலை செயய்யப்பட்ட ஒரு வாலிபரின் உடல் பலத்த வெட்டுக்காயங்களுடன் கிடந்தது. உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூரில் உள்ள தோப்பூர் கடற்கரை முட்புதரில் நேற்று வாலிபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அப்பகுதிக்கு சென்றவர்கள் இதை பார்த்து திருச்செந்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் டி.எஸ்.பி சாமி துரைவேலு, இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்னி ஜெயசந்திரன், சுந்தர்ராஜன் ஆகியோர் விரைந்து சென்றனர்.
பிணமாக கிடந்தவருக்கு 22 வயது இருக்கும். தலை, கழுத்து, தொடை ஆகிய பகுதிகளில் வெட்டுக் காயங்கள் உள்ளது. கறுப்பு, சிவப்பு கட்டம் போட்ட சட்டையும், பச்சை கலரில் லூங்கியும் அணிந்திருந்தார். கழுத்தில் சில்வர் செயின் போட்டிருந்தார். மர்ம கும்பல் கடத்தி வந்து கொலை செய்து வீசி உள்ளது.
காதல் தொடர்பாக யாராவது கடத்தி வந்து கொலை செய்து உடலை வீசிச் சென்றார்களா அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறில் கொல்லப்பட்டரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications