தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள்: ராஜபக்சே முடிவு

ஜே.ஆர்.ஜெயவர்த்தனே இலங்கை அதிபராக இருந்தபோது அரசியல் சட்டத்தில் 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. மேலும் மாகாண கவுன்சில்களும் உருவாக்கப்பட்டன.
மேலும் தற்போது இலங்கை மத்திய அரசின் வசம் உள்ள காவல்துறை பொறுப்பு மாகாண கவுன்சிலர்களின் சுயேச்சை அமைப்பாக மாற்றப்படும்.
இந்த சட்டத் திருத்தம் பின்னர் வந்த அரசுகளால் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த சட்டத் திருத்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
அதன்படி தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கால அரசுகள் உருவாக்கப்படும். காவல்துறை பொறுப்பு இந்த மாகாணங்களின் சுதந்திர துறையாக மாற்றப்படும்.
ராஜபக்சேவின் இந்த முடிவுக்கு இந்தியாவின் நெருக்குதலே காரணம் எனக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி இலங்கையின் 60வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இருப்பினும் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தினால் மட்டுமே பிரதமர், இலங்கைக்கு வர முடியும் என இந்திய அரசுத் தரப்பில் இலங்கை அரசுக்கு நெருக்குதல் தரப்பட்டதாக தெரிகிறது.
மேலும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தையும் இலங்கை அரசு அறிவிக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்தே ராஜபக்சே அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுக்கும் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி விரைவில் ராஜபக்சே இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்.
புதிதாக அறிவிக்கப்படவுள்ள வடக்கு மாகாண கவுன்சிலின் தலைவராக முன்னாள் எம்.பி. ஆனந்தசங்கரி தலைவராக நியமிக்கப்படவுள்ளார். அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இந்த மாகாண நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிப்பார்.
கிழக்குக் கவுன்சிலில் யாரைத் தலைவராக நியமிப்பது என்பது குறித்து இதுவரை அரசு முடிவெடுக்கவில்லை. இருப்பினும் இந்த மாகாணக் கவுன்சிலுக்கும், அரசு ஆதரவு தமிழர் ஒருவரே நியமிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது. அதேசமயம், முஸ்லீம் மற்றும் சிங்கள சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 2ம் மட்ட நிர்வாக பொறுப்புகளில் நியமிக்கப்படுவர்.
கிழக்கு மாகாணக் கவன்சில் தலைவர் பொறுப்பில் பிள்ளையன் என்பவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு உள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications