கிருஷ்ணகிரி விபத்தில் பெங்களூரை சேர்ந்த 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னையிலிருந்து பாரம் ஏற்றிவந்த லாரி கிருஷ்ணகிரி அருகே வெற்றி தோட்டம் என்ற இடத்தில் வரும் போது பழுதானது. இதையடுத்து அந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டது.
இன்று அதிகாலை சென்னையிலிருந்து பெங்களூர் வந்த தனியார் சொகுசு பேருந்து அந்த லாரி மீது பலமாக மோதியதில் பேருந்தில் இருந்த 3 பேர்
பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் இறந்தவர்கள் பெங்களூரை சேர்ந்த ஆனந்தகுமார் (35), பன்சாய் சர்மா (30) மற்றும் விசாகப்பட்டணத்தை சேர்ந்த ஸ்ரீராம் (40) என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications