தகவல் அறியும் சட்டம்: 2 ஆண்டுகளில் 32,000 மனுக்கள் மீது நடவடிக்கை
கரூர்: தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் கடந்த 2 வருடங்களில் 32,000 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக தகவல் ஆணையர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் கூறுகையில்,
தகவல் ஆணைய சட்டத்திற்கு என தனி சிறப்புக்கள் உள்ளது. நாட்டில் என்னென்ன சட்டங்கள் உள்ளது என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கவேண்டும். மூடிய புத்தமாக இருக்ககூடாது. இந்த தகவல் அறியும் சட்டம் 97 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுளுக்கு முன்பு இது போன்ற சட்டம் தமிழகத்தில் இருந்து. ஆனால் அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் தான் இருந்தது. மக்கள் போராட்டம் நடத்தியால் தான் இந்த சட்டம் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளலாம். சரியாக பதில் கிடைக்கவில்லை எனில் ஆணையத்திடம் புகார் செய்யலாம்.
இது அடிப்படை ஊழலை தடுப்பதற்கு இயற்றப்பட்ட சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 32,000 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது