தமிழ் தெரிந்த கலெக்டர்களை நியமிக்க கோரிக்கை
திருச்சி: தமிழ் தெரிந்த ஐஏஎஸ் அதிகாரிகளை கலெக்டர்களாக நியமிக்க வேண்டும் என்று அம்பேத்கார் மக்கள் இயக்க தலைவர் வை.பாலசுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி வந்த வை.பாலசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில், அமுதா என்ற பெண்ணை போலீசார் விபச்சார வழக்கில் கைது செய்து 12 மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இது சட்ட விரோதம் ஆகும். அமுதா மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு.
இந்த சம்வத்தில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பெண்ணிற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளும் கலெக்டர்கள் அந்த மனுவை படிக்க முடிவதில்லை. காரணம் அவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. அதனால் மக்கள் என்ன கோரிக்கைக்கு மனு கொடுத்தனர் என்பதே தெரியாமல் போய் விடுகின்றது.
எனவே மாவட்ட கலெக்டர்களாக தமிழ் பேச, படிக்கத் தெரிந்த அதிகாரிகளையே நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பாலசுந்தரம்.












Click it and Unblock the Notifications