தொண்டு நிறுவனங்களுக்கு சோனியா விருது - ரொக்கப் பரிசு
சென்னை: மத்தியில் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளை மக்களிடம் சரியாக கொண்டு செல்லும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 61வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்த ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளை மக்களிடம் சரியான முறையில் எடுத்துச் சொல்லும், கொண்டு செல்லும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ரொக்கப் பரிசு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
இதுதவிர, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தேசதிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குறித்து மக்களிடம் சரியான முறையில் பிரசாரம் செய்யும் நிறுவனங்களுக்கு அன்னை சோனியா காந்தி விருதும் வழங்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார் கிருஷ்ணசாமி.