அகதிகள் முகாம்களை சீரமைக்க ரூ. 6 கோட

Subscribe to Oneindia Tamil


திருச்சிராப்பள்ளி: இலங்கை தமிழ் அகதிகளுக்கான முகாம்களில் போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ரூ. 6 கோடி செலவிடப்படும் என மறுவாழ்வுத்துறை ஆணையர் கற்பூரசுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு நடப்பாண்டில் ரூ. 42 கோடி நிதியை அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்காக ஒதுக்கியுள்ளது. இதில் ரூ. 6 கோடி நிதி, இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.

இதுதவிர குறைந்த விலையில் அரிசி உள்ளிட்டவற்றை விநியோகிப்பது, பாத்திரங்கள் வழங்குவது, பண உதவி உள்ளிட்டவையும் செய்யப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 117 அகதிகள் முகாம்கள் உள்ளன. 73 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ளனர். அனைத்து முகாம்களிலும் குடிநீர், கழிவு நீர் வசதிகளை முறையாகச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதிலமடைந்துள்ள மேற்கூரைகளைச் சரி செய்யும் பணியும் திட்டமிடப்பட்டு வருகிறது.

பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் ரூ. 3 கோடி மதிப்பில் முகாம்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் திட்டமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அகதிகளின் வாழ்க்கைத் தரத்ைத மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் கற்பூரசுந்தரபாண்டியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+