சிறுவணிகர்களைக் காக்க ஜன. 29ல் வணிகர்கள் உண்ணாவிரதம்
திருச்சி: சிறு வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த தமிழகத்தில் உள்ள 140க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.
திருச்சியில் இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தமிழ்நாடு வர்த்தகர் சம்மேளன மாநிலத் தலைவர் ஏ.கே.ஹூசேன், பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட வர்த்தகர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதியில், முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கவுள்ளோம்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தக சங்கமும், தமிழ்நாடு வர்த்தர் சம்மேளனமும் ஏற்பாடு செய்கின்றன.
இந்தப் போரட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக 5 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சிறு வணிகர்கள் பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
இந்தக் கமிட்டி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வியாபாரிகள், வர்த்தர்களிடம் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு திரட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications