ஆரம்பமானது சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
நெல்லை: தஞ்சை தமிழ் பல்கலைகழகம் ஆரம்பித்துள்ள ஓராண்டு சித்த மருத்தவ பட்டயப்படிப்பை உடனே ரத்து செய்ய கோரி நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் துவங்கியுள்ளனர்.
சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ படிப்புகள் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவம் சார்ந்த பட்டயபடிப்பு தமிழ் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இதற்கு மாநிலம் முழுவதும் மருத்துவ மாணவர்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ள ஓராண்டு சித்த மருத்துவ பட்டயபடிப்பை ரத்து செய்யகோரி நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் துவங்கியுள்ளனர்.
தாங்கள் 4 வருடம் சித்தா மருத்துவப் படிப்பை படிக்கும் நிலையில் தஞ்சை பல்கலைக்கழகம் ஓராண்டு பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்துவதை இந்த மாணவ, மாணவிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் போராட்டம் முடிந்த நிலையில் தற்போது சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் உள்ளிருப்பு போராட்டம் அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications