மதுரை சாலையில் ஓடி உயிரிழந்த புள்ளி மான்
மதுரை: மதுரை நகரில் திடீரென ஓடி வந்த புள்ளி மான் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்திருந்த அந்த மான், காட்டில் கொண்டு போய் விடப்பட்ட பின்னர் பரிதாபமாக உயிரிழந்தது.
மதுரை திருமலை நாயக்கர் மஹால் உள்ள சாலையில் திடீரென நேற்று மாலை ஒரு மான் துள்ளிக் குதித்து ஓடி வந்தது. இதைப் பார்த்த வாகனதாரிகள் குழப்பமடைந்து வாகனங்களை ஓட்ட முடியாமல் நிறுத்தினர்.
போக்குவரத்தைப் பார்த்து மிரண்டு, மருண்டு அங்கும் இங்கும் ஓடிய அந்த மானின் உடலில் நாய்கள் கடித்துக் குதறியதால் ஏற்பட்ட காயங்கள் காணப்பட்டன.
இதையடுத்து வனத்துறையினருக்குத் தகவல் போனது. வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து அந்த மானைப் பிடித்தனர். பின்னர் கால்நடை மருத்துவமனைக்கு மான் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சிகிச்சை அளித்த பின்னர் சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு காட்டில் மானை விட்டனர். ஆனால் நடக்கவே முடியாமல் சுருண்டு விழுந்த அந்த மான், சில விநாடிகளில் பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த மானுக்கு 6 வயது இருக்கும் எனத் தெரிகிறது. திருமலை நாயக்கர் மஹால் பகுதியில் வசிக்கும் யாரோ இந்த மானை வீட்டில் வைத்து வளர்த்து வந்துள்ளனர் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications