செங்கல் சரிந்து பெண் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென செங்கற்கள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 50 வயது சித்தாள் பலியானார்.
சென்னையில் நடந்து வரும் கட்டட கட்டுமானப் பணியில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மாகாலி (50) என்ற பெண் கட்டுமானப் பணியாளர் சித்தாளாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை கட்டுமானப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது திடீரென செங்கற்கள் சரசரவென சரிந்து விழுந்தது. இதில் மாகாலி சிக்கிக் கொண்டார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 கொத்தனார்கள், பொறியாளர் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications