தென்னிந்தியாவில் கால்பதிக்க பிரஸ்டீஜ் உடன் சேரும் பிவிஆர்
பெங்களூர்: தென்னிந்தியா முழுவதும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளை அமைப்பதற்காக பிவிஆர் சினிமாஸ் பிரஸ்டீஜ் குழுமத்துடன் சேர்ந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
பெங்களூரில் ஃபோரம் வணிக வளாகத்தில் 11 திரையரங்குகளை பிவிஆர் நிறுவனம் வைத்துள்ளது. இதற்கு அதிக வரவேற்பு இருந்ததையடுத்து தென்னிந்தியா முழுவதும் கால்பதிக்க முடிவு செய்தது.
பிவிஆர் சினிமாஸின் தலைவர் சஞ்சீவ்குமார் கூறியதாவது,
அடுத்த 3 வருடங்களில் தென்னிந்தியா முழுவதும் 10 மல்டி ஃபிளக்ஸ் வணிக வளாகத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த 10 வணிக வளாகத்திலும் மொத்தமாக 60 திரையரங்குள் அமைக்கப்படும். இதற்கான கட்டுமானப் பணிகளை பிரஸ்டீஜ் குழுமம் கவனிக்கும்.
இந்த 10 வணிக வளாகங்களும் தென்னிந்திய நகரங்களான சென்னை, ஹைதராபாத், கொச்சி, மங்களூர் மற்றும் மைசூரில் அமைக்கப்படும். பெங்களூரில் மேலும் 3 வணிக வளாகங்கள் திரையரங்குகளுடன் அமைக்கப்படும். இது தவிர மேலும் 2 வணிக வளாகம் அமைக்க நகரங்கள் இனிமைல் தேர்வு செய்யப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.350 கோடி முதலீட்டில் 250 திரையரங்குகளை நாடு முழுவதும் அமைக்க பிவிஆர் முடிவு செய்துள்ளது என்றார்.
இதுகுறித்து பிரஸ்டீஜ் குழுமத்தின் தலைவரும், நிர்வாக அதிகாரியுமான இர்ஃபான் ரஸாக் கூறியதாவது,
எங்கள் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 20 மல்டி ஃபிளக்ஸ் ஷாப்பிங் மால்களை கட்ட உத்தேசித்துள்ளது. பெங்களூரில் பிவிஆர் நிறுவனத்தின் மால்கள் ஒயிட்ஃபீல்டு மற்றும் சாந்திநிகேதன் ஆகிய இடங்களில் அமைக்கப்படும். ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் இந்த மல்டி ஃபிளக்ஸ் மால்கள் அமைக்கப்படும்.












Click it and Unblock the Notifications