For Daily Alerts
Just In
மலேசியா-விமான நிலையத்தில் வைத்து அன்வர் இப்ராகிம் கைது
கோலாலம்பூர்: துருக்கியில் இருந்து மலேசியாவுக்குத் திரும்பிய எதிர்க் கட்சித் தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அன்வர் இப்ராகிம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அரசுக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டிவிடுவதாக அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் பட்டியலில் அவர் இருப்பதாகக் கூறிய போலீசார் சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின் அவரை விடுவித்தனர்.
இந் நிலையில் இன்றும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை அரசு அதிகரிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்த நாடாளுமன்றம் முன் கூடிய இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த அதிகாரிகளை வைத்துக் கொண்டு தேர்தலில் தில்லுமுல்லு செய்ய அரசு முயல்வதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 17:38 [IST]