தேமுதிக மாநில செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!

திருநெல்வேலியில் வரும் 14, 15 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு பல்வேறு யூகங்களையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ள நிலையில் 15ம் தேதி சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள அக் கட்சியின் மாநில செயற்குழுவும் அக்கட்சியினரிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த செயற்குழு-பொதுக்குழு காலை 10 மணிக்கு விஜயகாந்த் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற் குழு, பொது குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நெல்லை திமுக மாநாடு எந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளதோ அந்தளவுக்கு இந்தக் கூட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்றும், இதில் கூட்டணி, நிர்வாகிகள் மாற்றம், திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக கேப்டனுக்கு நெருக்கமான பிரமுகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications