For Daily Alerts
Just In
தூத்துக்குடியில் பாலிடெக்னிக் மாணவி தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாலிடெக்னிக் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி முருகம்மாள். இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் ஆனந்தி. தூத்துக்குடியில் உள்ள பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
இந் நிலையில் அரசு மருத்துவமனை வாளக குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவர் தனது உடலில் மண்ணெணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வயிற்று வலியால் இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கம்போல் சொத்தை காரணத்தை கூறுகின்றனர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 19:30 [IST]