விமானி வரவில்லை: சென்னை-மலேசியா ஜெட் ஏர்வேஸ் விமானம் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: விமானி வேலைக்கு வராததால் நேற்றிரவு சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இரவு 22.30 மணிக்கு கோலாலம்பூர் கிளம்ப வேண்டிய அந்த விமானத்தில் ஏற 124 பணிகளுக்கு போர்டிங் பாஸ் தரப்பட்டுவிட்ட நிலையில், 16 விமான ஊழியர்கள் விமானத்தில் ஏறி புறப்படுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.
ஆனால், விமான வரவில்லை. நெடு நேரம் காத்திருந்த பின்னரும் விமானியிடம் இருந்து எந்தத் தகவும் இல்லாததால் மாற்று விமானிக்குக் கூட ஏற்பாடு செய்ய முடியாமல் திணறியது ஜெட் ஏர்வேஸ்.
இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பயணிகள் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இன்றிரவு கோலாலம்பூர் அழைத்துச் செல்லப்படுவார்களாம்.












Click it and Unblock the Notifications