குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்தது
அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு இன்று 2வது கட்ட வாக்குப் பதிவு நடந்தது.
குஜராத் சட்டசபையில் உள்ள 182 தொகுதிகளுக்கும் 2 கட்ட தேர்தல் திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 87 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இன்று 2வது கட்டமாக மீதமுள்ள 95 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் இந்த 95 தொகுதிகளும் உள்ளன. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மொத்தம் 1.87 கோடி வாக்காளர்கள் இதில் பங்கேற்றனர். இவர்களில் 91.5 லட்சம் பேர் பெண்கள் ஆவர். மொத்தம் 599 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
20 ஆயிரத்து 544 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தலையொட்டி 574 கம்பெனி பாரா மிலிட்டரி படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
அகமதபாத் மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications