For Daily Alerts
Just In
வேன் கவிழ்ந்து விழுந்ததில் உ.பி. பெண் பக்தர் சாவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பிடாரிசேரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் உத்தரப் பிரதேசத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு யாத்திரையாக வந்த 50 வயதுப் பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
உ.பியிலிருந்து சில பயணிகள் தமிழகத்திற்குச் சுற்றுலா வந்திருந்தனர். அனைவரும் ஒரு வேனில் மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் சென்றனர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள பிடாரிசேரி என்ற இடத்தில் வேன் வந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
இதில் சும்சன் என்ற பெண்மணி (50) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 15 பேர் படுகாயமடைந்தனர். இறந்த சும்சன் ஒரு வழக்கறிஞர் என்று தெரிய வந்துள்ளது.
படுகாயமடைந்த அனைவரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Sunday, December 16, 2007, 12:36 [IST]