சட்டீஸ்கர் சிறையிலிருந்து 300 கைதிகள் தப்பி ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாலா என்ற ஊரில் உள்ள சிறையிலிருந்து 110 மாவோ நக்சலைட்டுகள் உள்ளிட்ட 300 கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் சட்டீஸ்கரில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

தாண்டேவாலா சிறையில் ஏராளமான மாவோ நக்சலைட்டுகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை 5 மணியளவில் இந்த சிறையிலிருந்து 110 மாவோ தீவிரவாதிகள் உள்ளிட்ட 300 பேர் துணிகரமாக தப்பினர்.

கைதிகள் தப்பிச் செல்ல முயன்றபோது அதைத் தடுக்க முயன்ற 2 விசாரணைக் கைதிகள் மற்றும் 3 பாதுகாவலர்களை தப்பிச் சென்ற கைதிகள் சரமாரியாக தாக்கியதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.

முதலில் சுஜித் குமார் என்ற நக்சலைட்தான் தப்பினார். அவர் பாதுகாவலர் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்தார். பின்னர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபடி மற்ற கைதிகள் தப்ப உதவினார்.

இந்த சிறையில் மொத்தம் 377 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை அமைந்துள்ள குதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் என்பதால் சிறைக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி முக்கால்வாசி கைதிகள் தப்பிச் சென்றது, சட்டீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதிகள் தப்பிச் செல்லும்போது ஆறு துப்பாக்கிள், ஒரு வயர்லஸ் செட் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க தீவிர வேட்டை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+