பிரமோத் கொலை: பிரவீன் குற்றவாளி என தீர்ப்பு!

பாஜகவின் 2ம் மட்ட தலைவர்களில் முன்னோடியாக இருந்தவர் பிரமோத் மகாஜன். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். உடன் பிறந்த தம்பியான பிரவீன் மகாஜன் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டு தனது அண்ணனை சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.
பிரவீன் மகாஜன் மீதான வழக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி எஸ்.பி. தவரே தீர்ப்பளித்தார்.
அதில், பிரமோத் மகாஜனைக் கொலை செய்தது பிரவீன்தான் என்பது சந்ேதகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, பிரமோத் மகாஜனை, பிரவீன் மகாஜன் சுட்டுக் கொன்றுள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது என்று அறிவித்தார்.
பிரவீன் மகாஜனுக்குரிய தண்டனை குறித்த விவரம் நாளை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
பிரவீனால் சுடப்பட்ட பிரமோத் மகாஜன், 12 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி பின்னர் மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications