வாக்கிங் போன நாட்டாண்மை வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை அருகே சுரண்டையில் அருகே காலையில் வாக்கிங் சென்ற ஊர் நாட்டாண்மையை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

நெல்லை மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள குருங்காவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (58). இவருடைய மனைவி இசக்கியம்மாள் (53). இவர்களுக்கு குழந்தை கிடையாது.

பணத்தை வட்டிக்கு விட்டு தொழில் செய்து வந்த பெரியசாமி அந்த ஊர் நாட்டாண்மையாகவும், அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றின்
தர்மகர்த்தாகவும் இருந்துள்ளார்.

குருங்காவனத்திலிருந்து தினமும் காலையில் பெரியசாமி வாக்கிங் வருவார். வழக்கம் போல் வாக்கிங் வந்து கொண்டிருக்கும் போது சுரண்டை அருகே பைக்குகளில் வந்த 5க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் அவரை வழிமறித்தது. உடனே பெரியசாமி ஓடினார். ஆனால் அவரை விரட்டி
சென்ற கொலைகார கும்பல் கழுத்தை துண்டாக்கி வெட்டி படுகொலை செய்தது விட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் பெரியசாமி ரத்தவெள்ளத்தில் பிணமானார்.

பட்டபகலில் நடந்த படுகொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால் தான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

குருங்காவனம் ஊர் நாட்டாண்மை படுகொலை செய்யப்பட்டது அறிந்த அந்த கிராமத்து மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+