என்ன உதவிகள் வேண்டும்?-இலங்கையில் இந்திய குழு ஆலோசனை

இந்தியாவிலிருந்து 6 பேர் கொண்ட உயர் மட்ட பாதுகாப்புத் துறை நிபுணர் குழு கொழும்பு வந்துள்ளது.
இந்தக் குழுவினர், இலங்கை ராணுவத் தளபதி பொன் சமரவீராவை சந்தித்துப் பேசினர். ராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பின்போது தற்போதைய இலங்கை நிலவரம், விடுதலைப் புலிகளுடனான போர் குறித்த நிலவரம், இலங்கை படையினரின் பலம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், இலங்கை படைகளுக்கு என்ன மாதிரியான உதவிகள் வேண்டும் என்றும் இந்தியத் தரப்பு, இலங்கை தரப்பை கேட்டுள்ளது.
இலங்கைக்கு முன்பு இந்தியா கொடுத்த இந்திரா வகை ரேடார்களை தரம் உயர்த்தித் தரவும், மேலும் புதிய ரேடார்களைக் கொடுக்கவும் இந்தியக் குழு சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர இந்திய, இலங்கை கடல் எல்லையில் இரு நாட்டு கடற்படையினரும் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதேபோல கொழும்பு வந்துள்ள ரஷிய குழுவினருடன், இலங்கை பாதுகாப்பு படைக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இலங்கையின் முப்படைகளின் பலத்தையும் அதிகரிக்கத் தேவையான நவீன ஆயுதங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications