வேலூரில் 6 சிறார் கைதிகள் தப்பி ஓட்டம்
Subscribe to Oneindia Tamil

சிறு வயதில் தவறு செய்பவர்கள் வேலூரில் உள்ள சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு ஏராளமான சிறுவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
வேலூரில் கடந்த 2 தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. நேற்றிரவு மழை பெய்து கொண்டிருக்கையில் மின்தடை ஏற்பட்டது. அப்போது சீர்திருத்த இல்லத்தின் ஓர் அறைக்குள் அடைக்கப்பட்டிருந்த 6 சிறுவர்கள் ஜன்னல் கம்பியை வளைத்து இரவோடு இரவாக தப்பியோடி விட்டனர்.
தப்பிய 6 பேர்களில் மூவர் கொலை குற்றவாளிகள் ஆவர்.
இந்த சம்பவம் குறித்து சீர்திருத்த இல்லத்தின் தலைவர் அறிவுசெல்வம் புகார் அளித்ததை தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஆனந்தசாமி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications