For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலை வழக்கில் 2 இந்திய சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

துபாய்: கொலை வழக்கில் இந்தியாவை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு துபாய் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

48 மற்றும் 25 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், துபாயில் உடன் வேலை பார்க்கும் சக நாட்டவரை இரும்பு கம்பியால் அடித்து, துணியால் அவரது முகத்தை அழுத்தி கொலை செய்தனர்.

கொலை செய்தபின் ஆழமான குழியில் வைத்து மறைக்கவும் முயற்சி செய்து, பின்னர் அவரது செல்போனை திருடி சென்று விட்டனர்.

இது தொடர்பாக துபாய் போலீசார் இந்திய சகோதரர்கள் இருவரையும் கைது செய்னர். இக்கொலை குறித்து விசாரித்து வந்த துபாய் நீதிமன்றம் கொலை குற்றத்திற்காக 2 சகோதரர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதனால் அவர்கள் இருவருக்கும் 25 வருடம் தண்டனை கிடைக்கும். தண்டனை காலம் முடிந்த பின் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X