பக்ரீத் கருணாநிதி, தலைவர்கள் வாழ்த்து
சென்னை: பக்ரீத் திருநாளையொட்டி முஸ்லீம்களுக்கு தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தியாக மனப்பான்மையையும், ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் இந்த நாள் நமக்குள் மேலோங்கச் செய்யட்டும். அமைதியை வளப்படுத்தட்டும்.
பக்ரீத் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனத உளம் கனிந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முகம்மது நபிகளின் கோட்பாடுளை, போதனைகளை பின்பற்றும் இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்கிறது.
இதுதவிர மேலும் பல சலுகைகளையும் திமுக அரசு வழங்கி வருகிறது என்பதை இந்த நாளில் நினைவு கூற விரும்புகிறேன் என்று கூறி வாழ்த்தியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இஸ்லாமியர்ளுக்கு பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications