தூத்துக்குடி-தென் கொரிய கப்பலின் துணை கேப்டன் மர்ம சாவு
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வந்த தென் கொரிய நாட்டு சரக்கு கப்பலின் துணை கேப்டன் மர்மமான முறையில் இறந்ந்தார்.
தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் இருந்து பாஸ்பாரிக் அமிலத்தை ஏற்றி செல்வதற்காக பங்களாதோஷில் இருந்து எம்.வி.ஏஸ்-7 என்ற தென் கொரிய சரக்கு கப்பல் கடந்த 13ம் தேதி இரவு புறப்பட்டது.
கடந்த 19ம் தேதியன்று கப்பல் தூத்துக்குடியை நோக்கி வந்துக்கொண்டிருந்தபோது துணைக் கேப்டன் ஜான் அங்குள்ள கப்பலின் டேங்குகளை சுத்தம் செய்யும் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
30 அடி ஆழமுள்ள டேங்குக்குள் அவர் இறங்கினார். ஆனால் நெடுநேரம் வரை அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த கப்பல் ஊழியர்கள் டேங்குக்குள் இறங்கி பார்த்துள்ளனர். அப்போது உள்ளே இருந்த நீரில் ஜான் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கப்பலின் கேப்டன் லீ-ஆங்-ஹாங் தூத்துக்குடி துறைமுகத்திற்கு தகவல் கொடுத்தார். துறைமுக அதிகாரிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து துணை கேப்டன் ஜான் உடலுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது.
போலீசார் முன்னிலையில் ஊழியர்கள் அவரது உடலை இறக்கினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இறந்த ஜான் டேங்கினுள் விஷ வாயு தாக்கி இறந்திருக்கலாம் என கப்பல் ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால், இது கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. பிரேதப் பரிசோதனையில் தான் முழு விவரம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications