கும்பகோணத்தில் குவிந்த கணித மேதைகள்!
கும்பகோணம்: கும்பகோணத்தில் உலக கணித மேதைகளுள் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் கணித மேதைகள் குவிந்தனர்.
கும்பகோணம் சாஸ்த்ரா கல்லூரியில் கணித மேதை ராமானுஜர் விருது வழங்கும் விழாவும், 5வது உலக கணித மாநாடும் துவங்கியது. 3 தினங்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.
கணித மேதைகள் மாநாட்டை பிரான்ஸ் நாட்டு தியரி மேரி கியூரி பல்கலைக்கழக பேராசியர் மிக்காயில் வால்ஸ்மிட் துவக்கி வைத்தார்.
இம்மாநாட்டிற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்து ஏராளமான கணித மேதைகள் கலந்து கொண்டனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணித பேராசியரியருக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் கணித மேதை ராமானுஜர் நினைவு விருது, 10,000 அமெரிக்க டாலர், கேடயம், பராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
எண்ணியல் கோட்பாடு, இயற்பியல், சிறப்பு சார்புகள் போன்ற பல தலைப்பில் இந்த மாநாட்டில் ஆய்வு மன்றங்கள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications