வெள்ள பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் கருணாநிதி ஆய்வு
கடலூர்: 2வது நாளாக இன்றும் முதல்வர் கருணாநிதி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். இன்று கடலூர் மாவட்டத்தில் அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.
டெல்லி பயணத்தை முடித்து விட்டு சென்னைக்குத் திரும்பியுள்ள முதல்வர் கருணாநிதி நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வெள்ளத்தில் மூழ்கியுள்ள பயிர்களைப் பார்வையிட்டார்.
விவசாயிகளிடம் சேத விவரம் குறித்து கேட்டறிந்த அவர் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரனோடை பாலத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் முதல்வர் கருணாநிதி வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட மணல்மேடு, அரூர் அகரம், பர்வதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற முதல்வர் அங்கு விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். அரசின் உதவிகளையும் வழங்கினார்.












Click it and Unblock the Notifications