காங்கிரஸுக்கு நல்ல பாடம்: இடதுசாரிகள்
டெல்லி: குஜராத்தில் மதவாத பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள், மத்திய அரசின் அணுகுமுறைகளுக்கு கிடைத்துள்ள தோல்வியாகும். குஜராத் தேர்தல் காங்கிரஸுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்று இடதுசாரி கட்சிகள் கூறியுள்ளன.
குஜராத் தேர்தல் முடிவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவாத அரசியல் மிகவும் ஆழமாக வேரூண்றியுள்ளது நிரூபணமாகியுள்ளது. மதவாத சக்திகளை வாக்குச் சீட்டுக்கள் மூலமாக மட்டும் எதிர்க்க முடியாது, நமது அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தல் முடிவு ஒரு பாடமாகும். பாஜகவுக்கு மாற்றான சக்தியாக இனியும் காங்கிரஸால் நீடிக்க முடியாது என்பதும் புரிய வந்துள்ளது.
மோடிக்கு எதிராக நிலவிய அம்சங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தவறி விட்டது. மோடிக்கு எதிரான மாற்றுத் திட்டங்களை செயல்படுத்த அது தவறி விட்டது.
அணு சக்தி ஒப்பந்தம், காங்கிரஸ் அரசின் கொள்கைகள் தோல்வி அடைந்து விட்டதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன் கூறுகையில், பாஜகவிலிருந்து வந்த அதிருப்தியாளர்ளுக்கு டிக்கெட் கொடுத்தததுதான் காங்கிரஸ் செய்த பெரும் தவறு. குறிப்பாக மோடிக்கு எதிர்ப்பு அதிகம் என கருதப்பட்ட செளராஷ்டிரா பகுதியிலிருந்து பாஜகவுக்குக் கிடைத்துள்ள வாக்குகளைப் பார்க்கும்போது மோடிக்கு எதிரான அலை சரியாக வீசவில்லை என்று தெரிய வருகிறது.
மேலும் அதிருப்தியாளர்களை மிக எளிதில் மோடி சமாளித்துள்ளார். முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் கூட பாஜகவுக்கு கணிசமான வெற்றி கிடைத்திருப்பது அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயமாகும் என்றார்.












Click it and Unblock the Notifications