மேட்டுப்பாளையம்-குன்னூர் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மீண்டும் போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்-குன்னூர் ரோட்டில் கல்லாரில் தூரிப்பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1925ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பாலம் கடந்த சில காலங்களில் பெய்த கன மழை காரணமாக கடும் சேதம் அடைந்தது.
இடியும் நிலையில் இருந்த பாலத்தில் போக்குவரத்து தொடர்ந்தால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடும் என்பதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் ரோட்டில் வரும் வாகனங்களை கோத்தகிரி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
இதற்கிடையில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை இயக்குனர் ராமநாதன் பாலத்தை ஆய்வு செய்து போக்குவரத்திற்கு தகுதியானது என அறிவித்தார்.
அதனை தொடர்ந்து நேற்று முதல் இப்பாலம் வழியாக பஸ், லாரி, வேன் போன்ற அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் நீலகிரி மாவட்ட மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications