கடும் குளிருக்கு மூதாட்டி பலி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் குளிருக்கு நடுங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பெண் சப் இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் கழுகுமலை ரோட்டில் 65 வயது மூதாட்டி ஒருவர் கோணிப்பையைப் போர்த்தியவாறு 2 தினங்களுக்கு முன்பு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற சங்கரன்கோவில் மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த மூதாட்டிக்கு காபி வாங்கி கொடுத்ததுடன், அவரை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
ஆனால் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் இந்திராணி என்று தெரிந்துள்ளது. ஆனால் அவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications