பாவூர்சத்திரம்-வாந்தி,பேதியால் நூற்றுக்கனக்கானோர் பாதிப்பு
பாவூர்சத்திரம்: கலங்கலான குடிநீரை குடித்ததால் பாவூர்சத்திரம் அருகே 100க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவூடையனூர், மாடியனூர், பொடியனூர், சின்னநாடானூர், கோட்டைவிளையூர், ராயாப்பநாடானூர் ஆகிய ஊர்களில் வாந்தி மற்றும் பேதி காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆவுடையனூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த ஊரைச் சேர்ந்த செல்வி, மாரிச்செல்வி, அரிதாஸ், பாலகன், திலகா, சுதா, ஜெயராணி ஆகியோரும் பொடியனூரை சேர்ந்த செல்லக்கனி, கோட்டைவிளையூரை சேர்ந்த ஜெயராஜ், சுடலைமணி நாடார் மற்றும் மாடியனூரை சேர்ந்த தங்கராஜா உள்பட பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தாமிராபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் விநியோகிக்கப்ட்டு வருகிறது. குடிநீரால் தான் வாந்தி, மற்றும் வயிற்றுபோக்கு ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிக்சை பெறுவோர் கூறியதாவது, தாமிராபரணி தண்ணீர் கலங்கலாக வருகிறது. குடத்தில் தண்ணீர் பிடித்து வைத்தால் அடியில் மண் உறைகிறது. இந்த தண்ணீரால் தான் இப்பகுதியில் வாந்தி, பேதி பரவுகிறது என்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications