திண்டுக்கல் நகைக் கடையில் ரூ.20 லட்சம் கொள்ளை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நகைக் கடையில் சுவற்றில் துவாரம் போட்டு ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் சரவணன் நகரசபை அலுவலகம் எதிரில் நகைக்கடை வைத்துள்ளார்.
நேற்றிரவு வழக்கம் போல் சரவணன் கடையை பூட்டிவிட்டு சென்றார். மீண்டும் இன்று காலையில் கடையை திறந்து பார்த்த சரவணன் அதிர்ச்சி அடைந்தார். கடையின் பின்பக்கச் சுவற்றில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ஏராளமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் எனத் தெரிகிறது.
உடனே இதுகுறித்து போலீசில் சரவணன் புகார் செய்தார். தகவல் அறிந்ததும் போலீசார் மோப்பநாய், கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் பள்ளி மைதானம் வழியாக சென்று நின்று விட்டது.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் இப்பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications