மத வெறியர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் - சரத்குமார்

Subscribe to Oneindia Tamil


சென்னை: மத வெறியைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்துவோருக்கு கடும் தண்டனை வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வன்முறைகள் நடந்தேறியதும், பாதுகாப்பும், ஊரடங்கு உத்தரவுகளும் போடும் வாடிக்கையை மாற்றி, வரும் ன் காப்போம் என்ற உணர்வுடன், இளைஞர்களுக்கு கல்வியறிவுடன், வேலை வாய்ப்புகளைப் பெருக்கி நல்வழி அமைத்துத் தர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதட்டமிக்க பகுதிகளை அடையாளம் கண்டு, அந்தப் பகுதிகளில் வாழும் சிறுபான்மையினருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மத வெறியாட்டங்களுக்கு கடுமையான தண்டனைகள் என்கிற வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அகிம்சை, சமத்துவம், சகோதரத்துவம், மதநல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டுவதில் அரசாங்கத்துடன், அரசியல் இயக்கங்களும், மதகுருமார்களும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.

புத்தாண்டு முதல் நமது தேசத்தில் இத்தகைய வன்முறைகள் நிகழ்வே இல்லை என்று வருங்கால சரித்திரம் சொல்லுமேயானால், அதுவே நமது தேசத்துக்கு கிடைக்கும் பெருமையும், கவுரவமும் ஆகும் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+