கார் விபத்தில் தேமுதிக பிரமுகர் பலி
கரூர்: கரூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் தேமுதிக பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள கேத்தம்பட்டியை சேர்ந்தவர் சுகுமார்(56). தேமுதிகவின் ஒன்றிய தலைவராக உள்ள இவர்
நேற்று மாலை தனது காரில் அரவக்குறிச்சியிலிருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது கார் தடா கோவில் அருகில் மண்ணெண்ணை பங்க் அருகில் வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒடி ரோட்டோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சுகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
சுகுமார் இறந்த செய்தி கேட்டு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications