புத்தாண்டு: ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

Subscribe to Oneindia Tamil

Ooty

ஊட்டி: புத்தாண்டையொட்டி ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ், பக்ரீத், மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பயணிகள் ஊட்டியில் முற்றுகையிட்டுள்ளனர். தற்போது புத்தாண்டும் வந்துவிட்டதால் மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளனர்.

கடந்த 3 நாட்களில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவை பார்வையிட்டுள்ளனர்.

கடந்த 21ம் தேதி 4,829 பேரும், 22ம் தேதி 6,021 பேரும், 23ம் தேதி 9,278 பேரும் தாவிரவியல் பூங்காவிற்கு வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.

புத்தாண்டையொட்டி இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் தாவரவியல் பூங்கா அதிகாரிகள்.

அதே போல புத்தாண்டை முன்னிட்டு ஊட்டியில் ஹோட்டல் நிர்வாகத்தினர் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நள்ளிரவு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தற்போது நிலவரப்படி ஊட்டியில் உள்ள அனைத்து ஹோட்டல் ரூம்களும் புக் ஆகிவிட்டன. இதனால் புதிதாக வரும் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பயணிகளின் அதிக அளவிலான வரவையொட்டி ஊட்டில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+