மதுரை-கலெக்டர் அலுவலகம் முற்றுகை 150 தலித்துகள் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இன்று கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்து முற்றுகையிட முயன்ற 60 பெண்கள் உட்பட 150 தலித் சமூக மக்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழக ஆதி திராவிடர் நல அமைச்சகம், வண்டியூரில் உள்ள தீர்த்தக்காடு பகுதியில் 9.5 ஏக்கர் நிலங்களை 1979 மற்றும் 1997ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக பிரித்துக் கொடுத்தது.

இந்த நிலங்களை வாங்கிய தலித் இனத்தவர்களில் சிலர் இடத்தை வேறு இனத்தவர்களுக்கு விற்பனை செய்து விட்டனர்.

இந் நிலையில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களை வேறு இனத்தவர்கள் மிரட்டி வாங்கிக் கொண்டதாகவும், அவர்களிடம் இருந்து அந்த நிலங்களை மீட்டு தரக் கோரியும் இன்று மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் சேர்ந்து தலித் சமூகத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதற்காக அண்ணா பேருந்து நிலையம் அருகில் ஸ்டவ் அடுப்பு, பாத்திரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்த பெண்கள் மற்றும் ஆண்களை தடுத்தி நிறுத்தினர்.

இதையடுத்து சாலையிலேயே அடுப்பு பற்றவைத்து உணவு சமைக்க ஆரம்பித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+