விஜயவாடாவில் கோவில் நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil


ஹைதராபாத்: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் மிகவும் பிரபலமான மலைக்கோவிலான கனகதுர்கா கோவில் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் கோவிலில் நெரிசல் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் இன்று காலையில் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்களின் கூட்டம் அலைமோதியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 1 குழந்தையும், 5 பெண்கள் இறந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அக்கோவிலில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசு நிதியுதவி:

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000மும் ஆந்திர அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+