மைசூர் மல்லிகைக்கு காப்புரிமை!!

இந்த வகை மல்லிகைப் பூக்களை உள்ளூரில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பயிரிட காப்புரிமை தரப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மட்டுமல்லாது உலக அளவிலும் மிகவும் புகழ் பெற்றவை இந்த மூன்று வகை மல்லிகைப் பூக்களும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பூக்களுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், வர்த்தக ரீதியில் இந்த மல்லிகை மலர்களுக்கு நல்ல விலை கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் உள்ளூர் மல்லிகை உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மூன்று வகை மல்லிகை மலர்களோடு, மைசூர் வெற்றிலை, நஞ்சன்கூடு வாழைப்பழம் ஆகியவற்றுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில தோட்டக்கலைத்துறை இயக்குநர் ராமகிருஷ்ணப்பா கூறியுள்ளார். அறிவு சொத்துரிமை சட்டத்தின் கீழ் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
ராமகிருஷ்ணப்பா தொடர்ந்து கூறுகையில், மொத்தம் 10 வகை தாவரங்கள் அறிவுச் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 6 வகை தாவரங்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவை என்றார் அவர்.
கர்நாடகத்தில் மொத்தம் 411 தோட்டக் கலைப் பண்ணைகள் உள்ளன. இந்த வகை அரிய தாவரங்களை மாநிலம் முழுவதும் பயிரிட கர்நாடக தோட்டக்கலைத் துறை ஊக்கப்படுத்துகிறது. பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது.
மைசூர் மல்லிகை பொதுவாக மைசூர் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில்தான் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டனா தாலுகாவிலும் மைசூர் மல்லிகை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
மிகவும் நறுமணத்துடன் கூடியதாக இருப்பதால் மைசூர் மல்லிகைக்கு பெரும் கிராக்கியும், நல்ல பெயரும் உள்ளது. உடுப்பி, ஹாதகள்ளி ஆகிய பகுதிகளிலும் கூட மைசூர் மல்லிகை கணிசமான அளவுக்குப் பயிரிடப்படுகிறது.
ஹாதகள்ளி மல்லிகைக்கு வாசனை மல்லிகை என்ற பெயரும் உண்டு. ஹூவின ஹாதகள்ளி பகுதியில்தான் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதி பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது.
இந்த மூன்று வகை மல்லிகையில் உடுப்பி மல்லிகைதான் ஜூனியர். உடுப்பி மாவட்டம் சங்கராபுரா பகுதியில்தான் முதன் முதலில் இந்த வகை மல்லிகை 100 ஆண்டுகளுக்கு முன்பு பயிரிடப்பட்டது. ஆனால் சமீப காலமாகத்தான் இது பிரபலமாகி வருகிறது.
உடுப்பி மல்லிகைக்கு கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகள், மும்பையில் நல்ல கிராக்கி உள்ளதாம்.
மதுரை மல்லிக்கும் காப்புரிமை கிடைக்குமா??
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications