மைசூர் மல்லிகைக்கு காப்புரிமை!!

இந்த வகை மல்லிகைப் பூக்களை உள்ளூரில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பயிரிட காப்புரிமை தரப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மட்டுமல்லாது உலக அளவிலும் மிகவும் புகழ் பெற்றவை இந்த மூன்று வகை மல்லிகைப் பூக்களும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பூக்களுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், வர்த்தக ரீதியில் இந்த மல்லிகை மலர்களுக்கு நல்ல விலை கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் உள்ளூர் மல்லிகை உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மூன்று வகை மல்லிகை மலர்களோடு, மைசூர் வெற்றிலை, நஞ்சன்கூடு வாழைப்பழம் ஆகியவற்றுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில தோட்டக்கலைத்துறை இயக்குநர் ராமகிருஷ்ணப்பா கூறியுள்ளார். அறிவு சொத்துரிமை சட்டத்தின் கீழ் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
ராமகிருஷ்ணப்பா தொடர்ந்து கூறுகையில், மொத்தம் 10 வகை தாவரங்கள் அறிவுச் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 6 வகை தாவரங்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவை என்றார் அவர்.
கர்நாடகத்தில் மொத்தம் 411 தோட்டக் கலைப் பண்ணைகள் உள்ளன. இந்த வகை அரிய தாவரங்களை மாநிலம் முழுவதும் பயிரிட கர்நாடக தோட்டக்கலைத் துறை ஊக்கப்படுத்துகிறது. பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது.
மைசூர் மல்லிகை பொதுவாக மைசூர் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில்தான் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டனா தாலுகாவிலும் மைசூர் மல்லிகை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
மிகவும் நறுமணத்துடன் கூடியதாக இருப்பதால் மைசூர் மல்லிகைக்கு பெரும் கிராக்கியும், நல்ல பெயரும் உள்ளது. உடுப்பி, ஹாதகள்ளி ஆகிய பகுதிகளிலும் கூட மைசூர் மல்லிகை கணிசமான அளவுக்குப் பயிரிடப்படுகிறது.
ஹாதகள்ளி மல்லிகைக்கு வாசனை மல்லிகை என்ற பெயரும் உண்டு. ஹூவின ஹாதகள்ளி பகுதியில்தான் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதி பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது.
இந்த மூன்று வகை மல்லிகையில் உடுப்பி மல்லிகைதான் ஜூனியர். உடுப்பி மாவட்டம் சங்கராபுரா பகுதியில்தான் முதன் முதலில் இந்த வகை மல்லிகை 100 ஆண்டுகளுக்கு முன்பு பயிரிடப்பட்டது. ஆனால் சமீப காலமாகத்தான் இது பிரபலமாகி வருகிறது.
உடுப்பி மல்லிகைக்கு கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகள், மும்பையில் நல்ல கிராக்கி உள்ளதாம்.
மதுரை மல்லிக்கும் காப்புரிமை கிடைக்குமா??
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications