கூரியர் நிறுவனங்களை முறைப்படுத்த புதிய சட்டம்
சென்னை: தனியார் கூரியர் நிறுவனங்களை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆர்.ராசா கூறியுள்ளார்.
சென்னையில் தேசிய அளவிலான கண்காட்சியை துவக்கி வைத்த ராசா பேசியதாவது,
தபால் தலை சேகரிப்பு என்பது தனி கலையாகும். தபால் தலைகள் அந்தந்த நாட்டின் அரிய தகவல்களை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளலாம். தபால் தலை சேகரிப்பதை ஊக்குவிப்பதற்கென்று தபால் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
தபால் தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தைக் கருதி அகில இந்திய அளவில் கண்காட்சியை தபால் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுதந்திரத்துக்குப்பின் 10வது கண்காட்சி சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1840ம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் முதல் தபால் தலையான பென்னி பிளாக், 1854ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தியாவின் முதல் தபால் தலையான சிந்து தபால் தலை உட்பட பல்வேறு அரிய தபால் தலைகள் இடம் பெற்றுள்ளன.
தபால் துறை சார்பில் மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்களின் உருவம் பொறித்த தபால் தலைகள், வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்களை நினைவு படுத்தும் தபால் தலைகள் என்று வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் மல்லிகை, சந்தன மணம் கொண்ட தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகின் முதல் தபால் தலை உள்பட லட்கக்கணக்கான தபால் தலைகள் அடங்கிய கண்காட்சியை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன்.
தனியார் கூரியர் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான சட்டம் கொண்டு வரப்படும். நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும். மேலும் தபால்துறை இழப்பை சரிக்கட்டுவதற்கும் ஆவன செய்யப்படும் என்றார் ராசா.












Click it and Unblock the Notifications