மத்திய அரசு மீதான குற்றச்சாட்டு மெய்பிக்கப்படும்: பழ.நெடுமாறன்

சென்னை: இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுக்க உடனே மத்திய அரசு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த கொலைகள் அதனுடைய ஆதரவில் தான் நடக்கிறது என குற்றசாட்டு மெய்ப்பிக்கப்படும் என்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான மகேஸ்வரன் புத்தாண்டு தினத்தன்று கோவிலில் வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் கும்பல்தான் இந்த படுகொலையை செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் படுகொலைகள் அனைத்தும் இந்த கும்பலால் தான் செய்யப்படுகிறது.
சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவின் விளைவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்ய சிங்கள அரசு துணிவு பெற்றுள்ளது.
தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுக்க உடனே மத்திய அரசு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த கொலைகள் அதனுடைய ஆதரவில் தான் நடக்கிறது என குற்றசாட்டு மெய்பிக்கப்படும் என பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications