பெனாசிர் வழக்கை விசாரிக்க ஸ்காட்லாந்து போலீஸ் வருகை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோ படுகொலை தொடர்பான படுகொலை வழக்கில், பாகிஸ்தான் போலீஸாருக்கு உதவியாக ஸ்காட்லாந்து போலீஸார் விசாரணையில் ஈடுபடவுள்ளதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
நேற்று பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு முஷாரப் உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கில் பாகிஸ்தான் போலீஸாருக்கு உதவியாக ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் ஈடுபடவுள்ளனர். விரைவில் அவர்கள் பாகிஸ்தான் வரவுள்ளனர்.
இதுகுறித்து நான் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனிடம் பேசினேன். எனது கோரிக்கையை ஏற்று ஸ்காட்லாந்து போலீஸ் படையை அவர் அனுப்ப சம்மதித்தார். இதற்காக அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
இந்த விசாரணை மூலம் அனைத்து சந்தேகங்களும், அனுமானங்களும் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்றார் முஷாரப்.












Click it and Unblock the Notifications