காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 மாதங்களில் தேர்தல்
காஞ்சீபுரம்: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 430 இடங்களுக்கு 3 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் சில பேர் இன்னும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. அவர்களிடம் உடனடியாக கணக்கு கேட்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகளுக்கு சட்ட நுணுக்கம் குறித்த பயிற்சி விரைவில் அளிக்கப்படும். தேர்தல் நேரத்தில் பதிவான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை விரைவில் முடிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 430 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் நடக்கும். இந்த தேர்தலில் முதன் முறையாக மின்னணு இயந்திரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அப்போது காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலும் சேர்த்து நடத்தப்படும். மாவட்டத்தில் பதட்டமான இடங்களை கண்டறிந்து ஆய்வு செய்யுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் சந்திரசேகரன்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications