காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 மாதங்களில் தேர்தல்
காஞ்சீபுரம்: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 430 இடங்களுக்கு 3 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் சில பேர் இன்னும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. அவர்களிடம் உடனடியாக கணக்கு கேட்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகளுக்கு சட்ட நுணுக்கம் குறித்த பயிற்சி விரைவில் அளிக்கப்படும். தேர்தல் நேரத்தில் பதிவான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை விரைவில் முடிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 430 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் நடக்கும். இந்த தேர்தலில் முதன் முறையாக மின்னணு இயந்திரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அப்போது காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலும் சேர்த்து நடத்தப்படும். மாவட்டத்தில் பதட்டமான இடங்களை கண்டறிந்து ஆய்வு செய்யுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் சந்திரசேகரன்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications